Update : Click here to know your Rank in Merit List
Update : Click here to know the Tentative Counselling Schedule announced by Government
News in Dinakaran
தினகரன் நாளிதழில் இருந்து
மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வு முடிவு வெளியிட தடை கோரிய வழக்கில் மருத்துவ கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ்
சென்னை, மார்ச் 22:
மருத்துவ பட்டமேற்படிப்புக்கு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மருத்துவக் கல்வி இயக்குனர், தேர்வு கமிட்டி செயலாளர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த டாக்டர் கண்ணன் உட்பட 6 பேர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
நாங்கள் எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளோம். எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. நாங்களும் தேர்வு எழுதினோம்.
நுழைவுத் தேர்வில் மொத்தம் உள்ள இடங்களில் 50 சதவீதம் இடங்கள் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்காக தமிழக அரசு ஒதுக்கும். மீதமுள்ள இடங்களை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு அரசு ஒதுக்கிவிட்டது. இது சட்டவிரோதமானது.
இதனால் எங்களைப் போன்ற எம்.பி.பி.எஸ். முடித்த மாணவர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் இடம் கிடைக்கவில்லை.
எனவே பட்டமேற்படிப்பு இடங்களை அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கிய அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
தகுதியான மாணவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். அதுவரை மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி மோகன்ராம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் தங்கசிவன், ‘‘மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு கடந்த பிப்ரவரி மாதம் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுவிட்டது. இதற்கான தேர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பட்ட மேற்படிப்பு இடங்களும் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டது சட்டவிரோதமானது. எனவே இந்தப் பட்டியலை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றார்.
அரசு சார்பில் ஆஜரான வக்கீல் தாட்சண்ய ரெட்டி, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். இதைக்கேட்ட நீதிபதி, மருத்துவக் கல்வி இயக்குனர், தேர்வுக் கமிட்டி செயலாளர் ஆகியோர் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
From http://www.dailythanthi.com/article.asp?NewsID=373920&disdate=11/13/2007
அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு
ஜனவரி மாதம் நடக்கிறது
அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளது.
மருத்துவ பட்டமேற்படிப்பு
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்பட 14 இடங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புகளும் பல்வேறு பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். முதுநிலை மருத்துவ படிப்பை பொறுத்தவரையில், சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் பொது மருத்துவம், மயக்கவியல், மகப்பேறு, குழந்தை மருத்துவம், நரம்பியல், ரேடியாலஜி உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் எம்.டி, எம்.எஸ். படிப்புகள் உள்ளன. இது தவிர, எம்.டி.எஸ். பல் மருத்துவ படிப்பிலும் பல்வேறு சிறப்பு பாடப்பிரிவுகள் இருக்கின்றன.
ஜனவரியில் நுழைவுத்தேர்வு
இவை அனைத்தையும் சேர்த்து முதுநிலை மருத்துவ படிப்புகளில் மட்டும் 925 இடங்கள் உள்ளன. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் டாக்டர்கள் சேர்க்கப்படுவார்கள். நுழைவுத்தேர்வுக்கு 90 மதிப்பெண். பணி அனுபவத்திற்கு 10 மார்க் ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 6 ஆயிரம் டாக்டர்கள் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை எழுதுகிறார்கள்.
இந்த நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதார பணிகள் டைரக்டர் ஜெனரல் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் இந்த நுழைவுத்தேர்வை ஜனவரி மாதம் 15-ந் தேதி முதல் 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க மாநில மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அட்மிஷன் பற்றிய அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.






0 comments:
Post a Comment